Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் எங்கே சென்றாய் என் நிலவே…! | கவிதை | விமல் பரம்

எங்கே சென்றாய் என் நிலவே…! | கவிதை | விமல் பரம்

2 minutes read

சொந்தமென்று எவருமில்லை
சொத்து சுகம் ஏதுமில்லை
அரவணைக்க தந்தையில்லை
ஆதரிக்க உறவுமில்லை

தாய்ப்பால் குடித்ததில்லை
தாயின் முகம் பார்த்ததில்லை
கூடப் பிறந்தோர் யாருமில்லை
கூடி வாழ யோகமில்லை

சமுதாயம் என்னை மதிக்கவில்லை
சாக மனம் துணியவில்லை
அநாதை இல்லம் கைவிடவில்லை
அன்போடு அணைக்கத் தவறவில்லை

தனிமையை நான் உணர்ந்ததில்லை
தனித்து இருக்க நேர்ந்ததில்லை
கால ஓட்டத்தைக் கவனிக்கவில்லை
காலமும் தொடர்ந்திருக்க அதிஷ்டமில்லை

வேலை தேடி அலையவில்லை
வேண்டிக் கேட்க மறுக்கவில்லை
கழுத்தில் தாலி தொங்கவில்லை
கணவன் துணை கிடைக்கவில்லை

தாயாய் சுமந்தேன் கலங்கவில்லை
காலால் உதைத்தாய் வலிக்கவில்லை
உணர்வை வடிக்க வார்த்தையில்லை
பத்துமாத பந்தம் திகட்டவில்லை

பிரசவித்த போது நினைவுயில்லை
நினைவு தெளிய நீயருகிலில்லை
உன்முக அழகைப் பார்க்கவில்லை
ஸ்பரிசம் உணர்ந்து அணைக்கவில்லை

எங்கே சென்றாய் சொல்லவில்லை
நீயின்றி இருப்பேனோ தெரியவில்லை
வயிற்றில் சுமந்தாலும் உரிமையில்லை
வாடகைத்தாய்க்கு என்றும் சொந்தமில்லை

.

.

.

.

விமல் பரம்

.

ஓவியம் : இந்து பரா | கனடா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More