செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிஞனாய் இருப்பதற்கு | வசந்ததீபன்

கவிஞனாய் இருப்பதற்கு | வசந்ததீபன்

0 minutes read

கவிஞனாய் இருப்பதற்கு வேதனைப்படுகிறேன்
எழுத்தாளன் எனச் சொல்ல
கூச்சமாய் இருக்கிறது
கஷ்டப்படும் ஜனங்களுக்கு
கடுகளவு கூட உதவிட முடியவில்லை
புத்தக அலமாரிகளில்
புத்தகங்கள் நிறைகின்றன
எழுத்தாளர்கள் நகரும் படிக்கட்டுகளில் மேலே போகிறார்கள்
எளிய மனிதர்களின் வேதனை தீர்ந்தபாடில்லை
குறத்திமுடுக்கில் தொலைந்து போனார்
எண்களோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்த வெள்ளை ஜிப்பாக்காரர்….
சிறுகதையின் திருமூலர்
ஜனங்கள் மொய்த்த
அரசு ஆஸ்பத்திரியில்
யாருமற்று இறந்து போனார்…
நாவலின் சக்கரவர்த்தி
பசி..பசி..பசி …என்று முனகியபடி
அருங்காட்சியகத்தின் கண்ணாடி பேழைக்குள்
வார்த்தைகளற்ற புத்தகமாகக் கிடக்கிறார்.
வனாந்திரத்தை கவ்வித் திரிகிறது
வயிற்றில்
யுகாந்திரமாந்திரமாய் எரியும் நெருப்புடன் மிருகமானது
என் நெஞ்சுள்
கூடைக் கட்ட ஈனக்குரலில்
கத்தித் திரிகிறது
குருதியில் நனைந்து நடுங்கியபடி
அடைக்கலான்குருவி…
தனியாய் வலையோடு செல்கிறேன்
கடல் என்மனசு போல கதறுகிறது
மீன்கள் வானில் துள்ளுகின்றன
கடவுள் முன்னால் வந்தார்
கடவுள் பின்னால் போனார்
கடவுள் எனக்குள் மட்டும் வரவில்லை.

வசந்ததீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.