தை பிறந்தால்
வழி பிறக்கும் என்று
தாத்தா இந்த
முறையும் சொன்னார்
என்னதை நினைத்து
சொன்னாரோ தெரியாது
இனப்பிரச்சினையை
நினைத்தாரோ தெரியாது
பல தையும் போய்
பாவம் தாத்தா
பார்த்திருந்தார்
பல தடவை
காணியும் போலீசும் வரும்
என்று காத்திருந்தார்
கன காலம்
திரும்பவும் யாரோ
தீர்வு பற்றி கதைத்ததால்
தீபாவளிக்குள் தீர்வு
வரும் என்று
காத்திருந்தார்
இந்தத் தடவையும்
இன்னும் ஒரு முறை
சொல்கிறார் தாத்தா
பல தடவை இந்தியா 13 ஐ
கொடுங்கள் என்றது போல்
தை பிறந்த கையோட
வழி பிறகும் என்கிறார்
பாவம் தாத்தா
போவதற்கும் முன்
தமிழனுக்கு ஏதேன்
கிடைப்பதை
பார்த்து விட்டு
போக நினைக்கிறார்
அது போக இப்போ
இனப்பிரச்சினையை இன்னும்
ஒரு மூன்று மாதத்தில்
தீர்ப்பேன் என்கிறார்
இப்போ வந்த அதிபர் ஒருவர்
அவ்வளவு சுலபம் என்று நினைத்தார் போல்
அத்தனை இனவாதிகளையும்
அருகில் வைத்துக் கொண்டு
எத்தனை ஒப்பத்தங்கள்
எத்தனை பரிந்துரைகள்
எத்தனை ஆலோசனைகள்
எத்தனை கமிசங்கள்
எல்லாம் கிழித்து எறிந்தபின்
இன்னும் ஒரு முறை
இதையும் தாத்தா நம்புகிறார்
பாவம் தாத்தா
நம்பிக்கையோடு இருக்கிறார்
ஆனால் அவர்களோ
இருட்டுக்குள் கறுப்புப் பூனையை
தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று
ஈழ மக்கள் தலைவன் ஒருவன்
சொல்லி இருந்த கதை போல்.
பா.உதயன்