Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் வெற்றிலை போடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

வெற்றிலை போடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா

1 minutes read

இரவில் வெற்றிலை ஊறவைத்த தண்ணீரை காலையில் குடிப்பதால் அதன் பலன்கள் அதிகம். ஜீரண பிரச்சனையை போக்க வெற்றிலையுடன் சிறிதளவு உப்பு மற்றும் சீரகம் சேர்த்து சாப்பிடலாம். மேலும் வெற்றிலை சாற்றுடன் ஓமம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும்.

தொண்டைக்கட்டு பிரச்சனைகளுக்கு வெற்றிலை சாற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து போட்டு வந்தால் பலன் கிடைக்கும்.


வெற்றிலை காரத்தன்மை கொண்டதாக இருக்கும். இதற்கு தாம்பூலம், வெள்ளிலை, நாகவல்லி, நாகினி, திரயல், சப்த ஷீரா, மெல்லிலை, மெல்லடகு போன்ற பெயர்களும் உண்டு. மேலும் இதில் கருப்பு, வெள்ளை மற்றும் கற்பூர வெற்றிலை போன்றவையும் உண்டு.

வெற்றிலையை எப்போது பயன்படுத்தினாலும் அதில் உள்ள காம்பு மற்றும் நரம்பு பகுதியை நீக்கிவிட்டு பயன்படுத்தவேண்டும். இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், தயமின், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

நன்றி | Webdunia

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More