13.10.19 தினம் Germany Munchen நகரில் தனிநபரான Anton Jeseph இன் 50 ஆவது ஆவண கண்காட்சியும்,கலை விழாவும் சிறப்பாக நடைபெற்றன.
சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா, மூர்த்தி வாத்தியார்,அன்ரன் பொன்ராஜா, அமரதாஸ் ஆகியோரும்; இராவண தேசத்திலிருந்து Dr.சத்தியமூர்த்தி, எழுத்தாளர் திருமதி.ரூபாவதி ஆகியோரும்; இராமனது தேசத்திலிருந்து Father ஸ்ரிபனும்; கனடாவிலிருந்து எழுத்தாளன் சேரனும்,ஜேர்மனியிலிருந்து எழுத்தாளர்கள் ஏலையா முருகதாஸன்,மண் சிவராசா, அகரம் இரவி ஆகியோர்களும்; இலண்டனிலிருந்து ஊடகர் விமல் சொக்கநாதன்,தாஸீசியஸ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
கண்காட்சிக்கு பழைய எழுத்தாணி ஓலைச்சுவடி, பத்திரிகைகள், நூல்கள், சஞ்சிகைகள், நாணயங்கள், கற்பகத்தரு கைவினைப்பொருட்கள், பித்தளை பாத்திரங்கள், முத்திரைகள், அரியவகை போட்டோக்கள் என்பன கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தன.
சுவிஸ் எழுத்தாளர்களின் பெரும்பான்மையான நூல்களை காணமுடிந்தது.மூன்று நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதிகளவு சிங்கள மக்கள் கலந்து கொண்டது மிக மிக சிறப்பாக அமைந்திருந்தது.
பேச்சுக்களை:- German,Singala மொழிகளில் மொழிபெயர்ததும் சிறப்பாக இருந்தது.இதுவரை புலத்தில் இப்படியான தமிழ் மொழி சார்ந்த ஒரு விழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா