Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனா ஆபத்தில் இலங்கை! பல்லாயிரத்தை தாண்டும் என எச்சரிக்கை

கொரோனா ஆபத்தில் இலங்கை! பல்லாயிரத்தை தாண்டும் என எச்சரிக்கை

1 minutes read

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருக்கி வருகிறது.

2500க்கும் அதிகமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்தால் இலங்கை மருத்துவதுறையினரால் சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்படும் என ஏற்கனவே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2500 முதல் 3000 கொரோனா நோயாளிகள் இருந்தால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கணிசமான அளவு நோயாளர்கள் கட்டுப்படுத்தப்பட்ட போதும், அண்மைக்காலமாக வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுவர்களால் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

குவைத் உட்பட நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டவர்களின் பெரும்பான்மையோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் கடற்படையினருக்கு இடையில் பரவும் கொரோனா ஆபத்து இன்னமும் நீங்கவில்லை.

இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை பாரிய ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் வசிக்கும் 45 ஆயிரத்திற்கும் அதிமான இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் நாடு திரும்பும் பட்சத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More