Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மொராக்கோ நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு

மொராக்கோ நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு

0 minutes read

மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,012 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 2,059 பேர் காயமடைந்த நிலையில். சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் 1,409 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டும் என்று மொராக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு மொராக்கோ நாட்டில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் பல வரலாற்று கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More