8
பொலனறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரத்மலானையில் இருந்து பொலனறுவையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற இவர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை ஆற்றுக்கு நீராடச் சென்ற போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
