உக்ரைனின் மரியுபோல் நகர் தற்போது ரஷ்ய படைகள் வசமுள்ள நிலையில், அங்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் முதல் முறையாக சென்றுள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், முதன்முறையாக உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் நேற்று (19) சென்றார்.
அந்த நகரின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்ய அவர் அங்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையும் பாருங்க – பூட்டினை கைதுசெய்ய உத்தரவு; பைடன் வரவேற்பு
உக்ரைனின் மரியுபோலில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பொதுமக்களுடன் கலந்துரையாடும் வீடியோவை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திருடனைப் போல் புடின் சென்று வந்திருப்பதாக உக்ரைன் விமர்சித்துள்ளது.