டியூனிசியாவில் படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 7 அகதிகள் உயிரிழந்ததுடன், 67 பேர் மாயமாகியுள்ளனர்.
ஆபிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வது அதிகரித்து வருகின்றது.
அவர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படு் நிலையில், இதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிந்து விடுகின்றன.
எனினும், நாளுக்கு நாள் இவ்வாறு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.