இங்கிலாந்தின் Cambridgeshire உள்ள Bluntisham மற்றும் Sutton ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிவு (29) நடந்த இந்த இருவேறு சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவங்களில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 32 வயது மற்றும் 57 வயதுடைய இருவரே கொல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, 27 வயது ஆண், 33 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், வோர்செஸ்டரில் 66 வயது நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைகளுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் கார் மற்றும் துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.