Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பாகிஸ்தானில் கடவுளை அவமதித்த மாணவனுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் கடவுளை அவமதித்த மாணவனுக்கு மரண தண்டனை

0 minutes read

பாகிஸ்தானில் இஸ்லாமிய கடவுளை அவமதித்தால் அல்லது மத நிந்தனையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது.

இந்த நிலையில், இஸ்லாமிய மதக்கடவுளை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவன் இஸ்லாமிய கடவுள் மற்றும் அவரது மனைவி குறித்து அவதூறு கருத்துகள் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், அதை 17 வயதான சிறுவனும் பகிர்ந்துள்ளான். 2022ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பஞ்சாப் நீதிமன்றில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கில் 22 வயது மாணவன், 17 வயது சிறுவன் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 22 வயது மாணவனுக்கு மரண தண்டனையும் 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More