அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று (12) புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான AI 171 விமானத்தில் பயணித்த ஒருவர் உயிர்தப்பியுள்ளார்.
அவரது புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள் : இந்தியாவில் இருந்து இலண்டனுக்கு புறப்பட்ட விமானம் 242 பேருடன் விபத்துக்குள்ளானது
ரமேஷ் விஸ்வாஷ் குமார் என்று குறித்த பயணி தற்போது அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
AI 171 விமான விபத்தில் பயணித்தவர்களில் இவர் ஒருவரே உயிர்தப்பியுள்ளார்.
இருக்கை எண் 11Aஇல் அமர்ந்திருந்த ரமேஷ் விஸ்வாஷ் குமார், விமானத்தின் அவசரகால வழி மூலம் கீழே குதித்து, காயங்களுடன் உயிர் தப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற இந்தியர் ஆவார்.
தொடர்புடைய செய்திகள் : விமானத்தில் பயணித்த ஒருவர் உயிர் தப்பினார்!

