இரட்டை கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு பேரை துணை மருத்துவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர், இது வெறும் 24 மணி நேரத்தில் இல்ஃபோர்டில் நடந்த மூன்றாவது வன்முறை சம்பவமாகும்.
புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சவுத்போர்ன் கார்டன்ஸில் உள்ள ஒரு வீட்டிற்குள் 20 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் பல காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
முதன்மை சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் மெட் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான காயங்களிலிருந்து இந்த ஜோடி இப்போது மீண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் போது லாக்ஸ்ஃபோர்ட் பூங்காவிற்கு அருகில் ஒரு விமான ஆம்புலன்ஸ் தரையிறங்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.