செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஒரு மாத தேடலுக்குப் பிறகு பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

ஒரு மாத தேடலுக்குப் பிறகு பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

0 minutes read

கிரேக்கத்தின் கவாலா நகரில் உள்ள ஆஃப்ரின்யோ கடற்கரையில் ஒரு மாதம் முன்பு காணாமல் போன 59 வயது இங்கிலாந்து பெண் மிச்செல் ஆன் ஜாய் பூர்டாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மிச்செல் காணாமல் போனபோது தனது கணவர் சூரிய குளியல் நாற்காலியில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அவரது உடல் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை என்றாலும், கண்டெடுக்கப்பட்ட உடல் தனது மனைவியுடையது என்று 99% உறுதியாக நம்புவதாக கணவர் கூறியுள்ளார்.

பொலிஸார் தேடலைத் தாமதமாகத் தொடங்கியதாகவும், தனது மனைவி அடையாளம் தெரியாத ஒருவருடன் சென்றதாக அவர்கள் கூறியது “அபத்தம்” என்றும் அவர் பொலிஸாரின் நடவடிக்கையை விமர்சித்தார்.

மிச்செலுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், பணம், கண்ணாடி, மருந்துகள் இல்லாமல் அவர் சென்றிருக்க மாட்டார் என்றும் கணவர் தெரிவித்தார். இந்த தம்பதியினர் 36 ஆண்டுகளாக திருமணம் செய்து கொண்டு வாழ்பவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.