பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் கொள்கை வகுப்பாளர்கள் வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வங்கியின் விகிதத்தை 2023 பிப்ரவரிக்குப் பிறகு மிகக் குறைந்த நிலைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வட்டி விகிதம் 4% இலிருந்து 3.75% ஆகக் குறையும் என ஆய்வாளர்கள் பரவலாக கணித்துள்ளனர்.
இது கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து செய்யப்படும் ஆறாவது வட்டி விகிதக் குறைப்பாக இருக்கும். எனினும், 09 உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கை குழுவில் இந்த முடிவு ஒருமனதாக இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறிக்கும் பணவீக்கத்தை 2% ஆகப் பராமரிக்கும் இலக்கை நாணயக் கொள்கை குழு கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கான முதன்மை கருவியாக வங்கி விகிதம் உள்ளது.
நேற்றுப் புதன்கிழமை வெளியிடப்பட்ட பணவீக்கத் தரவு, ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததை விட நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கத்தில் பெரிய வீழ்ச்சியைக் காட்டியுள்ளது. CPI விகிதம் ஒக்டோபரில் 3.6% ஆக இருந்த நிலையில், நவம்பரில் 3.2% ஆகக் குறைந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வங்கி விகிதமானது நுகர்வோரின் கடன் வாங்கும் செலவையும், சேமிப்பாளர்களுக்கு வழங்கப்படும் வருமானத்தையும் பெரிதும் பாதிக்கிறது.
வங்கி விகிதத்தைக் கண்காணிக்கும் அடமானங்களைக் கொண்ட சுமார் 500,000 வீட்டு உரிமையாளர்கள், 0.25 சதவீதப் புள்ளி குறைப்பு வந்தால், மாதாந்திரத் தவணைகளில் பொதுவாக £29 குறைப்பைக் காண வாய்ப்புள்ளது. நிலையான மாறி விகிதங்களில் உள்ள மேலும் 500,000 வீட்டு உரிமையாளர்களுக்கு, கடன் வழங்குபவர்கள் குறைப்பைச் செயல்படுத்தினால், மாதம் £14 வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
பெரும்பாலான அடமான வாடிக்கையாளர்கள் நிலையான விகித ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளனர். வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக, இந்த ஒப்பந்தங்களுக்கான விகிதங்கள் சமீபத்தில் குறைந்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக, நேற்றைய 17 நிலவரப்படி, இரண்டு வருட நிலையான குடியிருப்பு அடமான விகிதத்தின் சராசரி 4.82%ஆகவும், ஐந்து வருட விகிதம் 4.90%ஆகவும் உள்ளது.