செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா அமெரிக்காவுடன் அடுத்த கட்ட பேச்சு குறித்து ஈரான் தயக்கம்: இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

அமெரிக்காவுடன் அடுத்த கட்ட பேச்சு குறித்து ஈரான் தயக்கம்: இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

0 minutes read

அமெரிக்காவுடன் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா காட்டியதாகக் கூறப்படும் அலட்சியமான அணுகுமுறையும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களும், இந்தத் தயக்கத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தில் பதற்றம் தற்காலிகமாக குறைந்துள்ளதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும், அடுத்த கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கான திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முயற்சிகளில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே, ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmail Baghaei மேற்கண்ட தகவல்களை வெளியிட்டு, நிலைமையை கவனமாக மதிப்பீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.