Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 118 வயதில் உயிர் நீத்த மூத்த பெண்மணி

118 வயதில் உயிர் நீத்த மூத்த பெண்மணி

1 minutes read

உலகின் அதிக வயதான நபரான பிரான்சை சேர்ந்த கன்னியாஸ்திரி சகோதரி அண்ட்ரே 2021 கோவிட்டிலிருந்து தப்பி தனது 117 வயது பிறந்த தினத்தை கொண்டாடி இளம் சமூகத்துக்கு நம்பிக்கை கொடுத்திருந்தார்.

இத்தகைய பெண்மணி தனது 118 வைத்து வயதில் உயிரிழந்துள்ளார் . இவர் 11.2.1904 பிறந்தவர்.இவரது இயற் பெயர் லூசில் ராண்டன 1944 கத்தோலிக்க மதத்தை சேர்ந்து சகோதரி அண்ட்ரே என்ற பெயர் மாற்றம் பெற்றார்.

இவர் உலகின் இரண்டாவது மூத்த நபர் ஆவார். கடந்த ஆண்டு 119 வயதான ஜப்பானின் கேன் டனாசா இறந்தார். அதன்பின் உலகின் வயதான நபராகஅண்ட்ரே இருந்தார்.

சகோதரி அண்ட்ரே ஆசிரியராகவும் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் பெரும் பகுதியில் குழந்தைகளை கவனித்து கொண்டார். போர் முடிந்த பிறகு ஒரு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய அவர் 28 ஆண்டுகள் அனாதைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

கடந்த 2020ம் ஆண்டு லூசில் ராண்டன், வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, “நான் எப்படி இவ்வளவு காலம் வாழ்ந்தேன் என்று தெரியவில்லை. ரகசியம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. அந்த கேள்விக்கு கடவுளால் மட்டுமே பதில் அளிக்க முடியும்” என்று கூறியிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More