மும்பையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
முன்னதாக ஆயிரத்து 350 பேரை ஏற்றிச் சென்ற இந்த ரயில்களில் தற்போது 360 பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காட்கோபர்-வெர்சோவா இடையிலான 11 கிலோமீட்டர் தூரத்திற்கு காலை 8.30 தொடங்கி 12 மணி நேரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் 200 ரயில்கள் 8 நிமிட இடைவெளியுடன் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் டோக்கன்களுக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டுகளைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.