செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு!

0 minutes read

டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்வியாளா்கள் 866 போ் மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த 866 கல்வியாளர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் விவசாயிகள் நினைப்பதுபோல் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்தச் சட்டங்கள் அனைத்து சட்டவிரோத சந்தைக் கட்டுப்பாடுகளில் இருந்து வேளாண் வா்த்தகத்தை விடுவித்து, மண்டிகளை தாண்டி சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் இந்த வாக்குறுதிகளை தாங்கள் திடமாக நம்புவதாகவும் அறிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.