செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஸ்டாலினுக்கு கடவுள் வரம் கொடுக்க மாட்டார்!

ஸ்டாலினுக்கு கடவுள் வரம் கொடுக்க மாட்டார்!

1 minutes read

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

குறித்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார்.

கடவுளை இழிவாக பேசியவர்கள் கையிலே கடவுள் வேலை கொடுத்த காட்சியை பார்க்கிறோம். ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார். அ.தி.மு.க.வுக்குத் தான் வரம் கொடுக்கப் போகிறார்.

மு.க.ஸ்டாலின் உண்மையை சொல்லி வாக்கு கேட்டால், குறைந்தபட்சம் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்கும். ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் உயர அடித்தளம் போட்டது அ.தி.மு.க அரசு. ஸ்டாலின் வெளியில் பேசுவது ஒன்று, உள்ளே இருப்பது வேறு ஒன்று.

இதேவேளை கோவையில் இராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை அமைக்க பிரதமரிடம் கோரிககை விடுத்துள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.