உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் தமிழகம் வருகைத்தரவுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 12ம் திகதி ஆரம்பிக்கிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகளிடையே கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் வரும் 7 ம் திகதி மீண்டும் தமிழகம் வருகை தரும் அமித்ஷா, தேர்தல் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக கூட்டணியில் பா.ஜ.க போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சட்டசபைக்கான தொகுதி எண்ணிக்கை குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.