பெங்களூரு: கர்நாடக மாநிலம், கோலார் தங்கவயல் பஸ் நிலையத்தில் குவெம்பு பஸ் நிலையம் என தமிழில் எழுதப்பட்டிருந்தது.
கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழில் எழுதப்பட்ட எழுத்தின் மீது சிலர் மை பூசி அழித்தனர். இதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் குரல் எழுப்பிய நிலையில் பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் சம்பத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது குறித்து தாமோதரன் கூறுகையில், ‘‘மொழி சுதந்திரம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. இதை சீர்குலைக்கும் வகையில் ஒருசில அமைப்புகள் நடந்து கொள்கின்றன. மொழிவாரி மாநிலம் பிரிப்பதற்கு முன்பே வசிக்கிற தமிழர்களின் உரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்,’’ என்றார்.