லண்டன் நகரில் இந்த வாரம் நடக்க இருக்கிறது காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு. ராணி எலிசபெத் இந்த கூட்டமைப்பின் இளம் தூதராக இளவரசர் ஹாரியை நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
காமன்வெல்த் நாடுகளில் 30 வயதுக்கு குறைவானவர்கள் இரண்டு பில்லியனுக்கும் அதிகமாக உள்ளனர் என்றும் அவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக இளவரசர் ஹாரி செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார மற்றும் இயற்கை சவால்களை சந்திக்கும் வகையில் இளம் சமூகத்தினரை பலப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
