0
ஐரோப்பா கண்டத்தில், கொரோனாவுக்கு அதிக மக்களை பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்தது.
இங்கு கடந்த ஒரு வாரத்தில் 7000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இங்கிலாந்துக்கு அருகாமையில் உள்ள இத்தாலியில், கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட போதும் கால தாமதாமாக ஊரடங்கை அமுல்படுத்திய பிரதமர் போரிஸ் ஜான்சனை, எதிர் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.