Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நுவரெலியா மாவட்டத்தை நோக்கி  பயணிக்கும்  சுற்றுலா!

நுவரெலியா மாவட்டத்தை நோக்கி  பயணிக்கும்  சுற்றுலா!

1 minutes read

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட இன வன்முறையினை தொடர்ந்து பெருந்திரளான சுற்றுலா பயணிகள் நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வருகை தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கண்டியில் ஏற்பட்ட இன வன்முறையினை தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமது சுற்றுலாவிற்காக நுவரெலியா, எல்ல, சிவனொளிபாதமலை, ஹோட்டன் பிலேஸ் உள்ளிட்ட பிரதேசங்களை நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் இன்றைய தினம் பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே மற்றும் பொடி மெனிக்கே ஆகிய தொடரூந்துகளில் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனர்.

அட்டன் தொடரூந்து நிலையத்தில் வழமைக்கு மாறாக இன்றைய தினம் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து இறங்கி அங்கு தொடரூந்துக்க  காத்திருக்கிறார்கள்

அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதனாலும், சுற்றுலா பயணிகள் சுற்றுலா செய்கின்ற இடங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மேலும் அதிகரிக்கச் செய்யலாம் என பலரும் கருதுகின்றனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More