Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா லைக்கா மொபைல் ஸ்பெயின் 372 மில்லியன் யூரோவுக்கு விற்பனை

லைக்கா மொபைல் ஸ்பெயின் 372 மில்லியன் யூரோவுக்கு விற்பனை

1 minutes read

ஸ்பெயின் நாட்டில் இயங்கிவந்த லைக்கா மொபையில் நிறுவனத்தை அந்நாட்டின் தொலைத்தொடர்பு துறையின் பெரு நிறுவனமான மாஸ் மொவில் (MASMOVIL ) சுமார்  372 மில்லியன் யூரோவுக்கு வாங்கியுள்ளது.

ஈழத்தமிழ் வர்த்தகரான அல்லிராஜா சுபாஷ்கரன் பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்டு சுமார் பத்து நாடுகளுக்கு மேலாக தமது தொலைத்தொடர்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ள நிலையில் ஸ்பெயின் நாட்டில் இயங்கி வந்த லைக்கா நிறுவனத்தை  372 மில்லியன் யூரோவுக்கு விற்பதற்கு இன்று ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான  மாஸ் மொவில் ஏற்கனவே ஸ்பெயின் நாட்டில் இயங்கிவந்த ஈழத்தமிழரின் நிறுவனமான லிபார மொபைலை வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 8.6 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட அந்த நிறுவனம் இன்று லைக்கா மொபைல் நிறுவனத்தை கொள்முதல் செய்வதன் மூலம் 10.4 மில்லியன் வாடிக்கையாளர்களை தனதாக்கிக்கொள்ள இருக்கின்றது. இதன்மூலம் தமது வருடாந்த விற்பனை சுமார் 1,800 மில்லியன் யூரோக்களாக அதிகரிக்குமென  மாஸ் மொவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

லைக்கா நிறுவனம் அண்மையில் இந்திய திரைத்துறையில் தனது முதலீடுகளை நகர்த்திவரும் நிலையில் பெரும் நிதியில் பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்து வருகின்றது. இந்திய திரைத்துறையில் தவிர்க்கமுடியாத தயாரிபாளராக ஈழத்தமிழர் அல்லிராஜா சுபாஷ்கரன் மாறியிருகின்றார். இந்தியாவில் தமது முதலீடுகளை விரிவுபடுத்தும் முயற்சியில் வைத்தியத்துறையிலும் முதலீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலண்டன் செய்தியாளர்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More