Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைப் பிரசைகளுடன்  ஸ்ரீலங்கன் விமானம் கொழும்புக்கான இறுதிப்பயணம் 

இலங்கைப் பிரசைகளுடன்  ஸ்ரீலங்கன் விமானம் கொழும்புக்கான இறுதிப்பயணம் 

0 minutes read

இலண்டன் ஹீத்துரு விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கான சேவையை தினமும் நடத்திவந்த  ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நாளையுடன் (18/03/2020) மாலை 8.40 மணியுடன் தனது சேவையை தற்காலிகமாக இடை நிறுத்த தீர்மானித்துள்ளது. இதற்கான பயணசீட்டினை நிறுவனத்தின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரசைகள் மாத்திரமே பயணிக்கமுடியுமென நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு வந்து திரும்பி போகமுடியாது அவதிப்படும்  இலங்கைப் பிரசைகளின் நலனுக்காக இந்த சேவை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு ஸ்ரீலங்கன் இணையத்தளத்திலும் இலண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரக இணையத்தளத்திலும் பார்வையிடலாம்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More