0
மாத்தளை சுஜாதா மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் 40 மாணவிகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மாணவிகள் மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவிகள் நேற்று கரப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றவர்கள் என்று பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், குமட்டல் மற்றும் தலைவலி ஆகிய நோய் குணங்குறிகளுடன் மாணவிகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.