0
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்கன்குளம் பகுதியில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
செ.விமலதாஸ் (வயது 43) என்ற நபரே நேற்றிரவு இவ்வாறு உயிரிழந்தார்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.