Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ், முஸ்லிம் வீரர்களைப் புறக்கணிக்காதீர்கள்! – அரசிடம் வலியுறுத்து

தமிழ், முஸ்லிம் வீரர்களைப் புறக்கணிக்காதீர்கள்! – அரசிடம் வலியுறுத்து

2 minutes read

“இன்று தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் ‘வெட்டு’க்களை நிறுத்துங்கள். கிரிக்கெட் இந்த நாட்டின் ஐந்தாம் மதம். கிரிக்கெட்டை, கால்பந்தை, விளையாட்டைக் கொண்டு தேசிய ஐக்கியத்தை உருவாக்க உழையுங்கள்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,:-

“யாழ். பற்றிக்ஸ், மன்னார் சேவியர்ஸ் ஆகிய கல்லூரி அணிகள், எனது தொகுதி கொழும்புக்கு வந்து, 20 வயதுக்கு உட்பட்ட தேசிய பாடசாலை கால்பந்து வெற்றிக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடுகின்றார்கள். எவ்வளவு மகிழ்ச்சியான ஒரு தருணம். கால்பந்தில் தமிழ் பிள்ளைகளுக்கு இருக்கக் கூடிய திறமைகளைப் பாருங்கள்.

அமைச்சர் ரொஷான் ரணசிங்க, நீங்கள் இளைஞர். புதிதாக சிந்திக்கக் கூடியவர். கிரிக்கெட் இந்நாட்டின் ஐந்தாவது மதம். அதைக்கொண்டு அரசியல்வாதிகள் நிலைநாட்டத் தவறிய இன ஒற்றுமையை நிலைநாட்டுங்கள். கிரிக்கெட்டை, கால்பந்தை, விளையாட்டைக் கொண்டு தேசிய ஐக்கியத்தை உருவாக்க உழையுங்கள்.

இன்று தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் ‘வெட்டு’க்களை நிறுத்துங்கள். இங்கே பிரச்சினை என்னவென்றால், இலங்கையின் ஈழத்தமிழ், மலையகத் தமிழ், முஸ்லிம் விளையாட்டு வீரர்களுக்குத் திறமை இருந்தும் இடமளிக்கப்படுவதில்லை என்பதுவும், திறமைகளை வளர்த்துக்கொள்ள அரச கட்டமைப்பு வளங்களை வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில் வழங்குவதில்லை என்பதுவும்தான். இதற்கு என்ன காரணம்? ஒளிவு மறைவு இன்றி அனைத்தும் சிங்கள – பெளத்த மயம் என்ற பெருந்தேசியவாதம்தானே.

இந்தியா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா நாடுகளிலும் இனவாதம் முழுக்க இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றையும் மீறி இந்நாட்டு அணிகளில் இன, மத, நிற வாதங்களை மீறி பன்மைத்தன்மை இருப்பதைப் பார்க்கின்றோம். உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின், வெள்ளைக்கார நாட்டு அணிகளில் கறுப்பின வீரர்கள் கணிசமாக இடம்பெறுவதைப் பாருங்கள். இங்கே இது அறவே இல்லை. அதைப் பார்த்தாவது திருந்துங்கள்.

ஐயாம் எ ஸ்போர்ட்ஸ்மேன். நான் ஒரு விளையாட்டு ஆர்வலன். விளையாடும் வீரன். இந்த நாட்களில் இரவுகள் முழுக்க உலகக் கிண்ணக் கால்பந்து ஆட்டங்களைப் பார்க்கின்றேன். இலங்கையில் கால்பந்து சம்மேளனம் செயற்படவில்லை. இன்று சம்மேளனம் இடைநிறுத்தம் ஆகியுள்ளது. முன்னாள் தலைவரின் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு ஒரு அறிக்கை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களைத் தூர தள்ளி வைத்து விட்டு, தைரியமாக முடிவுகளை எடுத்து, புதிய தேர்தல்களை நடத்தி, புதிய கால்பந்து சம்மேளனச் செயற்குழு அமைத்து செயற்படுங்கள்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More