Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையக் கோரி இரண்டாவது நாளாகப் போராட்டம்!

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணையக் கோரி இரண்டாவது நாளாகப் போராட்டம்!

2 minutes read

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணையக் கோரி வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணத்தின் 8 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நாவற்குழி சந்திக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது.

“ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More