Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழர்களை ஏமாற்ற ரணில் சதி! – சஜித் அணி குற்றச்சாட்டு

தமிழர்களை ஏமாற்ற ரணில் சதி! – சஜித் அணி குற்றச்சாட்டு

1 minutes read

“எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசுகின்றார்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வுக்காக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தேவை என்ற
நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு முன் அந்த 13 இற்குள் இருக்கின்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை முதலில் நடத்த வேண்டும். நீண்ட காலமாக அந்தத் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கின்றது.

எதிர்கால ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக – அவர்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவே 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேசுகின்றார். அதற்கு நாம் எதிர்ப்பு. இதற்காகத்தான் நாம் கடந்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More