“ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் அமெரிக்கச் சொத்துப் பட்டியலை விரைவில் வெளியிட்டே தீருவோம்.”
– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், தமது அணி இனி ஒருபோதும் மொட்டுக் கட்சியிடம் சரணடையாது என்றும் அவர் சூளுரைத்தார்.
நாட்டை அழித்த மொட்டுக் கட்சிக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.