ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழில் பாட்டு பாடி, கட்சி ஆதரவாளர்களை மகிழ்வித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கருத்தமர்வும் இடம்பெற்றது.
இதன்போதே “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்…” என்ற பாடல் உள்ளிட்ட சில தமிழ் பாடல்களைப் பாடி, மண்டபத்தில் இருந்தவர்களை மகிழ்வித்தார் தயாசிறி.