Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சவரம் செய்யும் கத்தியால் மகனை வெட்டிய தந்தை!

சவரம் செய்யும் கத்தியால் மகனை வெட்டிய தந்தை!

0 minutes read

மகனைச் சவரம் செய்யும் சிகையலங்கார கத்தியால் வெட்டிய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பசறையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பசறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தை மதுபோதையில் மனைவியிடத்தே தகாத வார்த்தைகளைப் பேசியதோடு
தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை மகன்மார் தடுக்க முற்பட்ட வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் பசறைப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தந்தையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த மகன் பசறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் கண்டி பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பசறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More