Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நிறைவுக்கு வந்தது தையிட்டிப் போராட்டம்!

நிறைவுக்கு வந்தது தையிட்டிப் போராட்டம்!

0 minutes read

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டம், நேற்றிரவு 8 மணியளவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட செயற்பாடு தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு எனப் போராட்டகாரர்கள், கடந்த மூன்று நாட்களாகப் பதாகைகளைத் தாங்கியவாறு தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

14 குடும்பங்களுக்குச் சொந்தமான அண்ணளவாக 100 பரப்புகி காணியை விடுவிக்கக் கோரியும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பௌத்த கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்த மயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More