Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னாரில் கடத்தல் முயற்சி முறியடிப்பு! – இருவர் மடக்கிப் பிடிப்பு

மன்னாரில் கடத்தல் முயற்சி முறியடிப்பு! – இருவர் மடக்கிப் பிடிப்பு

1 minutes read

மன்னார், தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமம் பகுதியில் வியாபாரப் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று சிறுமிகள் இருவருக்கு இனிப்புப் பொருட்களை வழங்கி கடத்தல் மேற்கொண்ட முயற்சி பொதுமக்களின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியமளவில் வாகனத்தில் வியாபாரப் பொருட்களை விற்பனை செய்ய வந்த வாகனம் ஒன்றில் இருந்த சாரதி அந்த வீதி வழியாகப் பயணித்த இரண்டு சிறுமிகளுக்கு இனிப்புப் பொருட்களை வழங்கியுள்ளார்.

இதையடுத்து வாகனத்தில் கடத்த முற்பட்ட சமயம் இரண்டு பிள்ளைகளும் தப்பிச் சென்று கிராமத்தவர்களுக்குத் தெரிவித்த நிலையில் கிராம மக்கள் இணைந்து குறித்த வாகனத்தையும் வாகன சாரதி மற்றும் உதவியாளர் ஒருவரையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.

குறித்த சிறுமிகள் தப்பியோடி ஒழிந்த நிலையில் அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் துரத்திக் கொண்டு வந்தனர் என்றும், வாகனத்தினுள் வெளிநாட்டு நபர் ஒருவர் இருந்தார் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் வாகனத்தைச் சோதித்த நிலையில் வெளிநாட்டவர் இருக்கவில்லை என்பதுடன் வாகனத்தில் இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் பொதுமக்கள் தலைமன்னார் பொலிஸிடம் ஒப்படைத்த நிலையில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More