Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மின்சாரம் தாக்கித் தாயும் மகனும் பரிதாப மரணம்!

மின்சாரம் தாக்கித் தாயும் மகனும் பரிதாப மரணம்!

0 minutes read

மின்சாரம் தாக்கித் தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் கொழும்பு மாவட்டம், கடுவெல பிரதேசத்தில் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய தாயாரும், 22 வயதுடைய மூத்த மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வீட்டில் பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியை மூத்த மகன் திருத்திக் கொண்டிருக்கும் போது தாயார் அருகில் இருந்துள்ளார். இதன்போது மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளனர்.

தந்தையும், இளைய மகனும் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தமையால் இந்த அனர்த்தத்தில் அவர்கள் சிக்கவில்லை.

எனினும், வீட்டுக்கு வந்து சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த 48 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

20 வயதுடைய இளைய மகனை விசாரணைக்குட்படுத்தி அவரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More