செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காதல் தோல்வியால் பல்கலை மாணவி உயிர்மாய்ப்பு!

காதல் தோல்வியால் பல்கலை மாணவி உயிர்மாய்ப்பு!

1 minutes read

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

காதல் தோல்வி காரணமாக இப்பட்டதாரி மாணவி அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு மரணமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே பாடசாலையில் ஒரே தரத்தில் கல்வி கற்று வந்த இருவரும் பாடசாலை காலத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில் இருவரும் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்களின் காதல் நிலை அறிந்த இரு தரப்பு பெற்றோர்களும் பல்கலைக்கழக படிப்பு நிறைவுற்றதும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்து பேச்சுகளிலும் ஈடுபட்டிருந்தனர் எனவும் அறியமுடிந்தது.

ஆயினும், பல்கலைக்கழகம் சென்றதன் பின்னர் காதலனின் மனமாற்றம் காரணமாக மனமுடைந்த யுவதி அதிகளவான மாத்திரைகள் உட்கொண்டு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More