Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் வீடு புகுந்து தாக்குதல்: இதுவரை 58 பேர் கைது!

யாழில் வீடு புகுந்து தாக்குதல்: இதுவரை 58 பேர் கைது!

1 minutes read

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இதுவரையில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி 25 பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 25 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், ஏனைய 6 ஆண்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அச்சுவேலி பொலிஸார் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மூவரைக் கைது செய்திருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை 24 பேரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தூர் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெண்களின் படங்கள் ‘கிராஃபிக்ஸ்’ மூலம் ஆபாசப் படங்களாக மாற்றம் செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரவர்கள் இணைந்து முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 28ஆம் திகதி இரவு ஊரில் உள்ள இரண்டு இளைஞர்களே அவ்வாறு பெண்களின் படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர் எனக் குற்றம் சாட்டி, அந்த இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை ஊரவர்கள் நடத்தியிருந்தனர்.

அத்துடன் வீட்டினுள் இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து உடைத்தும், வீட்டின் முன் நின்ற வாகனங்களையும் அடித்து உடைத்தும் அவற்றுக்கு ஊரவர்கள் தீ வைத்திருந்தனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அச்சுவேலி பொலிஸார் தாக்குதலில் காயமடைந்த இளைஞர்களை அங்கிருந்து மீட்டு, வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்ற போது பொலிஸாருடன் முரண்பட்டு பொலிஸார் மீதும் ஊரவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அதில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

அதையடுத்து அங்கு கூடியிருந்த ஊரவர்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி விட்டு, காயமடைந்த இரு இளைஞர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் பொலிஸார் சேர்த்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தொடர் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More