Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி 19 வயது இளைஞர் சாவு!

மட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி 19 வயது இளைஞர் சாவு!

1 minutes read

மட்டக்களப்பில் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டுக்குச் சென்ற குறித்த இளைஞர், தாந்தாமலை குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கிய நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது இடைநடுவில் உயிரிழந்தார் என்று கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி, எருவில் – காளிகோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மோகனசிங்கம் பிரகதீசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தாந்தாமலை முருகள் ஆலய வருடாந்தத் திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று (26) களுவாஞ்சிக்குடி – எருவில் பிரதேச மக்கள் ஆலய வழிபாட்டுக்குச் சென்றனர்.

இதன்போது அங்கு சென்ற குறித்த இளைஞரும் அவரது நண்பர்களுமாக தாந்தாமலை குளத்தில் நீராடியபோது குறித்த இளைஞர் ரிழ் முழுகியதையடுத்து அவரை நண்பர்கள் காப்பாற்றி மகிழடித்தீவு வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார்.

சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More