Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் பஸ் மீது மரம் முறிந்து விழுந்து ஐவர் பலி!

கொழும்பில் பஸ் மீது மரம் முறிந்து விழுந்து ஐவர் பலி!

0 minutes read
கொழும்பு, கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் இ.போ.ச. பஸ் மீது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஐவர் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர்.

இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் படுகாயமடைந்த 17 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீதே இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்தது.

பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும், விமானப் படையினரும் ஈடுபட்டனர்.

இந்த அனர்த்தத்தால் அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More