December 10, 2023 9:30 am

நீர்த்தேக்கத்தில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன்  நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ கடை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே அந்த வீதியில் உள்ள சனசமூக நிலையத்துக்கு அருகில் நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

56 வயதான விக்கிரம ஆராச்சி லாகே ஜெய திஸ்ஸ என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்