Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் கோர விபத்து! தந்தையும் குழந்தையும் பலி! – தாய் உட்பட மூவர் காயம்

யாழில் கோர விபத்து! தந்தையும் குழந்தையும் பலி! – தாய் உட்பட மூவர் காயம்

1 minutes read
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் ரயிலுடன் ஹயஸ் வான் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும், 6 மாதப் பெண் குழந்தையும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். தாய் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானில் சென்ற இணுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான அப்சரா என்ற 6 மாதக் குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த குழந்தையின் தாயாரான 22 வயதுடைய பிரியங்கா என்ற பெண் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து இடம்பெற்ற வேளை அந்த இடத்தில் ரயில் கடவை காப்பாளர் நிற்கவில்லை என்றும், அவர் இல்லாததே விபத்துக்குக் காரணம் என்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More