கட்சியின் தற்போதைய உள்ளக நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காகக் கட்சியின் அரசியல் பீடம் இன்று கொழும்பில் கூடியது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்துஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்குக் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்தது.
சந்திரிகாவின் தலைமையில் நடைபெற்ற இன்றைய சந்திப்புக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சான் விஜயலால் டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.