2
கொழும்பு மாவட்டம், முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தல வீதியில் அமைந்துள்ள களனி கங்கையில் மிதந்த நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைவடைந்துள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.