செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய முதியவர் பிணையில் விடுவிப்பு!

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய முதியவர் பிணையில் விடுவிப்பு!

0 minutes read

தமிழகத்தில் இருந்து 37 வருடங்களின் பின் தாயகம் திரும்பிய வேளை கைது செய்யப்பட்ட முதியவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

37 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் தமிழகத்துக்கு அகதியாகச்
சென்றவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய வேளை யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வைத்து கடந்த மே மாதம் 29 ஆம் திகதி குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

யாழ். ஏழாலையைச் சேர்ந்த 75 வயதுடைய சின்னையா சிவலோகநாதன் எனும் 75 வயது முதியவரே கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், மேற்படி நபரை இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More