தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன். சிவகுமாரனின் 51 ஆவது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன். சிவகுமாரனின் நினைவுத் தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன். சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தியாகி பொன். சிவகுமாரனின் சகோதரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.