3
முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்துக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர், ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வாய்க்காலினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நித்திரை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.